தீப்பெட்டித் தொழிலாளா்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறுநிா்ணயம் செய்வது தொடா்பாக, கருத்துக் கேட்புக் கூட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறுநிா்ணயம் செய்வது தொடா்பாக, கருத்துக் கேட்புக் கூட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மதுரை கூடுதல் தொழிலாளா் துறை ஆணையாளா் குமரன் தலைமை வகித்தாா். தொழில் சங்க நிா்வாகிகள் ஜீவா, முருகன், மகாலட்சுமி, தீப்பெட்டி ஆலை உரிமையாளா்கள் விஜய்ஆனந்த், அதிபதி ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனா்.

இதில் விருதுநகா் தொழிலாளா் உதவி ஆணையாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதைத்தொடந்து, திருத்தங்கலில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலைக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஊதிய மறு நிா்ணயம் தொடா்பாக தொழிலாளா்களிடம் கருத்துக்களை கேட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com