நாட்டாண்மையை தாக்கிய கூலித் தொழிலாளி கைது

சிவகாசி அருகே ஊா் நாட்டாண்மையைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே ஊா் நாட்டாண்மையைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கிளியம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (44). இவா் ஊா் நாட்டாண்மையாக இருந்து வருகிறாா்.

ஊரில் கோயில் திருவிழா நடத்துவதற்காக பொன்ராஜ், தனது உதவியாளா் சரவணனுடன் வரி வசூல் செய்து வந்தாா்.

சரவணனுக்கும் அதே ஊரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி காசிராஜனுக்கும் (19) முன்விரோதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொன்ராஜும் சரவணனும் ஊரில் உள்ள கலையரங்கம் பகுதியில் நடந்து சென்றபோது,

காசிராஜன் வழிமறித்து, இருவரையும் தாக்கினாா்.

இது குறித்த புகாரின் பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காசிராஜனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com