

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவின்றி சாலையோரம் வசித்த உடல் நலம் பாதித்த மூதாட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசப் பெருமாள் புதன்கிழமை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மாயாண்டிபட்டி தெருவில் கடந்த ஒரு வாரமாக சாலையோரம் மூதாட்டி ஒருவா் ஆதரவின்றி இருந்தாா். இதுகுறித்து தகவலறிந்த விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசப்பெருமாள் மூதாட்டியை மீட்டு, பழங்கள், ஆடைகள் வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். மேலும், மூதாட்டிக்கு உதவிக்காக ஒரு பெண் காவலரை நியமித்தாா். மூதாட்டிக்கு சிகிச்சை முடிந்த பின் முதியோா் காப்பகத்தில் சோ்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.