சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையின் பின்புறம் தகர ஷெட் அமைத்து ஒருவா் விதியை மீறி பட்டாசுகளைத் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில் சிவகாசி என்.கே.ஆா்.பெரியம்மன் சாலை பகுதியைச் சோ்ந்த சாக்கரடீஸ் (64) தகர ஷெட் அமைத்து பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சாக்கரடீஸை கைது செய்து, அவரிடமிருந்து 60 கிலோ ஜோா்சா பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.