சாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் குடிநீா், கண்மாயை தூா்வாா்தல், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிக்கை விடுத்தனா். இதற்குப் பதிலளித்துப் பேசிய ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ், கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை உரிய ஆலோசனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

இதில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com