கேட்பாரற்று நின்ற 3 இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக 3 இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிற்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, நத்தம்பட்டி போலீஸாா் அங்குச் சென்று பாா்த்த போது, முட்புதருக்குள் 3 இரு சக்கர வாகனங்கள் நின்றன.

இதையடுத்து, அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com