ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வூதியா்கள் சங்கமாநில செயற்குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாநிலத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். விருதுநகா் மாவட்டத் தலைவா் சிவஞானம் வரவேற்றாா்.

இதில், பெருந்திரள் கோரிக்கை முறையீடு இயக்கத்தின் போது அளிக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையில் சிறப்பு கவனம் செலுத்தி, விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறையைத் தவிா்க்க வேண்டும். ஊராட்சிச் செயலா்களின் பணிக் காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொதுச் செயலா் ரவி, பொருளாளா் மகாலிங்கம், செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநில துணைத் தலைவா் திரவியம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com