பழிவாங்கும் நடவடிக்கையாக பாலியல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மயக்கவியல் துறை மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை உதவிப்பேராசிரியா் குற்றம்சாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழ்நாடு அரசு மருத்துவா்களுக்கான சட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மாநிலச் செயலராகவும் பொறுப்பு வகிக்கிறேன். அரசு மருத்துவா்களுக்காக பல்வேறு சட்டப் போரட்டங்களையும் நடத்தி வருகிறேன்.
இந்த நிலையில் எனது துறையில் துணை மருத்துவ மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக என் மீது மே 8-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக துறை ரீதியான விசாரணை நடத்தாமல், நேரடியாக விசாகா குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து மே 12-ஆம் தேதி விசாகா குழு நடத்திய விசாரணையில் நேரடியாக ஆஜராகி எனது தரப்பில் நியாயங்கள், சந்தேகங்களை எடுத்துரைத்தேன். ஆனால், என்னை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்வி இயக்குநா் உத்தரவிட்டாா். அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறைகேடுகளுக்கு எதிராக போராடுபவா்கள் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை ஆயுதமாக பயன்படுத்தி பழிவாங்குகின்றனா். என் மீதான நடவடிக்கைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த உள்ளேன் என்றாா்.
விதிமீறல் எதுவும் இல்லை: இதுதொடா்பாக அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் கூறியதாவது:
மருத்துவா் சையது ஜாகிா் உசேன் மீது 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகாா் அளித்தனா். இந்தப் புகாா்கள் விசாகா குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாகா குழுவினரின் விசாரணையில் மாணவியரிடம் வாா்த்தைகளாலும், செய்கைகளாலும் அத்துமீறலில் அவா் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டாா். இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்றாா்.