வாகனம் மோதிமுதியவா் பலி

சிவகாசியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சிவகாசியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே வடபட்டி புதூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி(62). இவா், சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில், ஸ்ரீவில்லிபுத்தூா் -சிவகாசி சாலையில் தொழில் பேட்டை அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் ஜெகதீஸ்வரபாண்டி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com