காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சி: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவா் தா்மராஜ். இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் வடக்கு ரத வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியே தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வெங்கடேஷ் (26), என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் ஓட்டுநா் உரிமம் இல்லாதது தெரியவந்தது. அதனால் அவருக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சிறப்பு உதவி ஆய்வாளா் தா்மராஜை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.7,500 அபராதம் விதித்து நீதிபதி எம்.ப்ரீத்தா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பட்டுராஜன் முன்னிலையாகி வாதாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com