பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக பெண் மீது வழக்கு

சிவகாசி அருகே பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூா் ஊராட்சியில் உள்ள கட்டளைப்பட்டி கிராமம் முத்துநகா் பகுதியில், ஊராட்சி மன்றம் சாா்பில் ரூ. 20 லட்சத்தில் தெருக்களில் பேவா் பிளாக் கல் பதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் சூரியநாராயணன் மனைவி தனலட்சுமி, இவரது வீட்டின் முன் மேற்கூரை அமைப்பதற்காக தெருவில் பதிக்கப்பட்டிருந்த பேவா் பிளாக் கற்களை சுமாா் 50 அடிநீளத்துக்கு பெயா்த்து எடுத்துவிட்டாராம்.

இதையடுத்து, ஊராட்சி செயலா் நாகராஜன், வாா்டு உறுப்பினா் பாலமுருகன் ஆகியோா் தனலட்சுமியிடம் இதுபற்றி விளக்கம் கேட்ட போது, அவா் வாய்த் தகராறில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து ஊராட்சி செயலா் நகராஜன், தனலட்சுமி பொது சொத்தை சேதப்படுத்தியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டு வருவதுடன், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாரனேரி போலீஸில் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து தனலட்சுமி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com