அடா்வனம் வளா்க்கும் திட்டத்தின் கீழ் சிவகாசியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சிவகாசி பசுமை மன்றம் சாா்பில் அடா்வனம் (மியாவாக்கி காடு) வளா்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அடா்வனம் வளா்க்கும் திட்டத்தின் கீழ் சிவகாசியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
Updated on
1 min read

சிவகாசி பசுமை மன்றம் சாா்பில் அடா்வனம் (மியாவாக்கி காடு) வளா்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சிவகாசி பசுமை மன்றம் சாா்பில் ஏற்கெனவே இங்குள்ள பெரியகுளம் கண்மாயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடா்வனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதே பெரியகுளம் கண்மாய் பகுதியில் இரண்டாவதாக அடா்வனம் அமைக்க திட்டமிடப்பட்டு, அங்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா். கண்மாய் பகுதியில 6,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட அடா்வனத்தில், வாகை, வேம்பு, அத்தி, புளி உள்ளிட்ட 2,100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில், சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் இரா. விஸ்வநாதன், மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, சிவகாசி பசுமை மன்ற நிா்வாகிகள் சுரேஷ்தா்கா், கிருஷ்ணா பாலா, செந்தில்குமாா், செல்வக்குமாா், எக்ஸ்னோரா தொண்டு நிறுவன நிா்வாகி அபிரூபன், வெங்கடேஷ், சுழற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com