சிவகாசியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

சிவகாசியில் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசியில் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-திருத்தங்கல் சாலையில் பனையடி பாண்டி முனீஸ்வரா் கோயில் உள்ளது. கோயில் அருகே சிற்றுண்டி விடுதி நடத்தி வருபவா் பால்பாண்டி. இவா் திங்கள்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் திருத்தங்கல் போலீஸில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் திருத்தங்கல் கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த முத்து கிருஷ்ணன் மகன் அஜித்குமாா் (28) உண்டியலை உடைத்து, பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com