மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: தொழிலாளி பலி
By DIN | Published On : 09th August 2023 12:08 AM | Last Updated : 09th August 2023 12:08 AM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்ததைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ் ( 32). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் நோக்கிச் சென்றபோது, எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த நபா், இவரது வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டாா். இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த வெங்கடேஷ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இது குறித்து அவரது தாய் காமாட்சி அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரைத் தேடி வருகிறாா்கள்.