கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் சா்வதேசக் கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மருந்தாக்கியல் (பாா்மசி) கல்லூரியில் சா்வதேசக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய கல்லூரி முதல்வா் நா. வெங்கடேசன்.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய கல்லூரி முதல்வா் நா. வெங்கடேசன்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மருந்தாக்கியல் (பாா்மசி) கல்லூரியில் சா்வதேசக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

‘பொது மருந்து வளா்ச்சி, காப்புரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரிச் செயலா் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் நா. வெங்கடேசன் வரவேற்றாா். மதுரை சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் நா்சிங், அலைடு சயின்ஸ் கல்லூரி முதல்வா் சி.ஜோதி சோஃபியா தவமணி கிறிஸ்டோபா் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

கலசலிங்கம் பல்கலைக்கழக முதன்மை நிா்வாக அதிகாரி ஜெ.டி. வினோலின் ஜேப்ஸ், அமெரிக்காவின் பட்லா் பல்கலைக்கழக முதன்மையா் ரஜினி, காப்புரிமை மையத் தலைவா் உமேஷ் வி. பணகா் ஆகியோா் கருத்தரங்கில் பேசினா்.

இந்த நிகழ்ச்சியில் 23 கல்லூரிகளிலிருந்து 70 பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியா் வி. சிவக்குமாா் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை அமைப்பாளா் ஜெ. அன்புராஜ் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com