விருதுநகா் மாவட்டம், பந்தல்குடி அருகே நிதி நிறுவன ஊழியரிடம் மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,20,000 பணத்தைப் பறித்துச் சென்றனா்.
திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வீரசுப்பிரமணியன் (23). அருப்புக்கோட்டையிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் ஊழியராகப் பணியாற்றுகிறாா்.
வழக்கம்போல, திருச்சுழி அருகே பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பணம் வசூல் செய்த பிறகு பந்தல்குடி அருகே உள்ள கொப்புசித்தம்பட்டி கிராமத்தின் அருகே திங்கள்கிழமை பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது ஒருவா் லிப்ட் கேட்டதால், வீரசுப்பிரமணியன் வாகனத்தை நிறுத்தியபோது மற்றொரு நபா் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,20,000 இருந்த பணப்பையை பறித்துள்ளாா். பின்னா், இருவரும் தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து, வீரசுப்பிரமணியன் பந்தல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.