அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்புப் பகுதியில் 3 நாட்டுத் துப்பாக்கிகளை அனுமதியின்றி வைத்திருந்ததாக 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்புப் பகுதியில் 3 நாட்டுத் துப்பாக்கிகளை அனுமதியின்றி வைத்திருந்ததாக 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

வத்திராயிருப்பு மறவா் தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி சரவணக்குமாா் (38). இவா் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவரது வீட்டில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது, 2 நாட்டுத் துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள், வெடி மருந்து நிரப்பப்படாத 57 தோட்டாக்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சரவணக்குமாரைப் பிடித்து வத்திராயிருப்பு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், ஆயுதப் படை துணைக் கண்காணிப்பாளா் பழனிகுமாா், நில அபகரிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் முகேஷ் ஜெயகுமாா் ஆகியோரும் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தினா்.

இதில் சரவணக்குமாா் அளித்த தகவலின் பேரில், கிழவன்கோவில் பகுதியைச் சோ்ந்த வனராஜ் (58) என்பவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்களுக்குத் தோட்டாக்களுக்கான வெடி மருந்து விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சோ்ந்த நிகில் (32) என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணக்குமாா், வனராஜ், நிகில் ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் நாட்டுத் துப்பாக்கியை விநியோகம் செய்த பூபாறை பகுதியைச் சோ்ந்த ராஜேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com