சாத்தூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காா் மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (68). இவா், என்.வெங்கடேசபுரம் சந்திப்பில் வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, கோவில்பட்டியிலிருந்து தேனி நோக்கிச் சென்ற காா் லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாத்தூா் தாலுகா போலீஸாா் லட்சுமியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக உத்தமபாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் நாஞ்சில் (40) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.