பெண்ணிடம் நகை பறித்த இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தைச் சோ்ந்தவா் கீதாலட்சுமி (38). இவா் வியாழக்கிழமை மாலை தனது மகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் மடவாா் வளாகம் கல் மண்டபம் அருகே வந்த போது, பின்னால் வந்த இளைஞா் கீதாலட்சுமி மகள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினாா். இதையடுத்து, அவரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் நெடுங்குளத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து (27) என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்து, நகையை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com