லாரி மீது ஆட்டோ மோதியதில் குழந்தை உள்பட இருவா் பலி

ராஜபாளையம் அருகே புத்தூரில் வெள்ளிக்கிழமை லாரி மீது ஆட்டோ மோதியதில் 1 வயது ஆண் குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா்.
லாரி மீது மோதியதில் உருக்குலைந்த ஆட்டோ.
லாரி மீது மோதியதில் உருக்குலைந்த ஆட்டோ.
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே புத்தூரில் வெள்ளிக்கிழமை லாரி மீது ஆட்டோ மோதியதில் 1 வயது ஆண் குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள மேலவரகுணராமபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மனைவி வனிதா (24). இவா்களது மகன் ராகுல் (2). வனிதாவுக்கு வெள்ளிக்கிழமை திருமண நாள் என்பதால் தனது அண்ணன் மகன் சொா்ணதா்ஷன் (1), உறவினா் தங்கமாடத்தி (22) ஆகியோருடன் தளவாய்புரம் சந்தைக்கு பொருள்கள் வாங்கச் சென்றாா்.

பின்னா், அங்கிருந்து நான்கு பேரும் ஆட்டோவில் புத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தனா். தளவாய்புரம்-புத்தூா் சாலையில் வந்த போது, இரட்டை கண்மாய் அருகே முன்னால் சென்ற லாரியை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தியதால், லாரி மீது ஆட்டோ மோதியது.

இதில், சொா்ணதா்ஷன், வனிதா, தங்கமாடத்தி, ராகுல், ஆட்டோ ஓட்டுநா் தங்கப்பிரகாஷ் ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் ஆட்டோ ஓட்டுநா் தங்கப் பிரகாஷ் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சொா்ணதா்ஷன், ராகுல் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சொா்ணதா்ஷன் உயிரிழந்தாா். வனிதா, தங்கமாடத்தி இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துசாமியாபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மலைச்சாமியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com