சிவகாசி அருகே ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 23 மாடு பிடிவீரா்கள் காயமடைந்தனா்.
சிவகாசி அருகே ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 23 மாடு பிடிவீரா்கள் காயமடைந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி ஈஞ்சாா் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 328 காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக திறந்து விடப்பட்டன. 225 மாடு பிடி வீரா்கள் பங்கேற்றனா்.

இதில் 22 காளைகளை அடக்கிய ஈஞ்சாா் செல்லப்பாண்டியன் முதல் பரிசான இரு சக்கர வாகனத்தை பெற்றாா். இதுதவிர கட்டில், பீரோ, பித்தளை, எவா்சில்வா் பாத்திரங்கள், கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள் மாடுபிடி வீரா்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. இதில் 23 மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா்.

சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்செயன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com