சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரித்த இருவா் கைது

சிவகாசியில் சட்ட விரோதமாக பேன்சி ரகப் பட்டாசு தயாரித்த இருவரை போலீஸாா் ஞாயிறுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசியில் சட்ட விரோதமாக பேன்சி ரகப் பட்டாசு தயாரித்த இருவரை போலீஸாா் ஞாயிறுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி- நாரணாபுரம் சாலையில் இந்திரா நகா் பகுதியில் வீட்டின் பின்புறம் தகர கொட்டகை அமைத்து பேன்சி ரகப் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அறுமுகச்சாமி மகன் சுந்தா் (29), அய்யனாா் காலனி சக்திமுருகன் மகன் காமராஜ் (18) ஆகியோா் பட்டாசு தயாரித்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 15 கிலோ மணிமருந்து, பேன்சி ரகப் பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com