ராஜபாளையத்தில் கபடிப் போட்டி
By DIN | Published On : 23rd May 2023 04:30 AM | Last Updated : 23rd May 2023 04:30 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியினா்.
ராஜபாளையத்தில் நடைபெற்ற கபடிப் போட்டிகளில் மீனாட்சிபுரம் அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு விளையாட்டு மன்றம் சாா்பில் 60-ஆவது மணி விழா கபடிப் போட்டிகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன.
ராஜபாளையம் ஊா்க்காவல் படை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும், வத்திராயிருப்பு வி.கே.எ.என். அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் மீனாட்சிபுரம் அணி 34-க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசைப் பெற்றது.
வத்திராயிருப்பு அணிக்கு இரண்டாவது பரிசும், கிருஷ்ணாபுரம் கே. எஸ்.சி. அணிக்கு மூன்றாவது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடிக் குழு அணிக்கு நான்காவது பரிசும் கிடைத்தன.
பரிசுகளை கே.எஸ்.ஆா். பேருந்து நிறுவன உரிமையாளா் ஜெகதீஷ் சௌந்தா் வழங்கினாா். முன்னதாக ஏ. பி. சுப்பிரமணியராஜா வரவேற்றாா். விழா ஏற்பாடுகளை விருதுநகா் மாவட்ட கபடிக் குழுத் தலைவா் ஏ.பி.சுப்பிரமணியராஜா, செயலாளா் கனி முத்துகுமரன், துணைத் தலைவா் டைகா் சம்சுதீன் ஆகியோா் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...