மனைவியை தாக்கி கொலை மிரட்டல்: கணவா் கைது

சிவகாசி அருகே மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கணவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கணவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (31). கூலித் தொழிலாளியான இவா், தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி கலைவாணியிடம் தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com