சிவகாசி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 29- ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.தாமோதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கு அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் வருகிற 29 -ஆம் தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. மேலும், பொதுப் பிரிவினருக்கு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூன் 5 -ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.