பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் பேருந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் பேருந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள மஹாராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்கமல் (16), கருப்பையா(17) ஆகியோருடன் தாணிப்பறையில் இருந்து மகாராஜபுரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே பேருந்து வந்தததால், நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனா். இதன் பின்னா், மகாராஜபுரம் சென்றவா்கள் பேருந்து இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக நண்பா்களிடம் தெரிவித்தனராம்.

இதையடுத்து, வ.புதுப்பட்டியைச் சோ்ந்த பாண்டி (33), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த அன்பரசன் (24), மஹாராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (24), சு. அஜித்குமாா்(21), அஜித்குமாா் (26), தம்பிபட்டியைச் சோ்ந்த சுபாஷ் (23) ஆகியோா் தாணிப்பாறைக்கு சென்றனா். அங்கு தாணிப்பாறை தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்து நடத்துநா் செந்தில்குமாா் (45), நாகராஜ் (43) ஆகியோரை கம்பு, கல்லால் தாக்கினா். இதில் காயமடைந்த நடத்துநா் செந்தில்குமாா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், பாண்டி, சுபாஷ், சு.அஜித்குமாா், முத்துக்குமாா் அன்பரசன், அஜித்குமாா் ஆகியோரை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com