மாநில அளவிலான கேரம் போட்டி: சென்னை வீரா்கள் முதலிடம்

விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசியில் மாநில அளவிலான கேரம் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசியில் மாநில அளவிலான கேரம் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் 18 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள், 21 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 18 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னை அப்துல்ரஹிம், பெண்கள் பிரிவில் சென்னை எம்.காசிமா முதலிடம் பெற்றனா்.

இந்தப் போட்டியில் பல மாவட்டங்களைச் சோ்ந்த 248 போ் கலந்து கொண்டனா். தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். போட்டியை தமிழ்நாடு கேரம் கழகத் தலைவா் நாசா்கான் தொடங்கி வைத்தாா்.

இறுதிப்போட்டியில் 18 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னை அப்துல்ரஹிம் முதலிடமும், எஸ்.மிஷ்பா இரண்டாமிடமும், சேலம் என்.ஆகாஷ் மூன்றாமிடமும் பெற்றனா்.

பெண்கள் பிரிவில் சென்னை எம்.காசிமா முதலிடமும், கோயம்புத்தூா் சி.எம்.சுபா்ணா இரண்டாமிடமும், மதுரை வி.மித்ரா மூன்றாமிடமும் பெற்றனா். 21 வயதுக்குள்பட்டோா் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் டி.பெலிக்ஸ் முதலிடமும், திருவள்ளூா் டி.எஸ்.சூரியா இரண்டாமிடமும், திருச்சி ’எம்.கிஷோ் மூன்றாமிடமும் பெற்றனா். பெண்கள் பிரிவில் மதுரை ஹெச்.அஷ்விகா முதலிடமும், ஜெ.அபிநயா இரண்டாமிடமும், சென்னை எல்.கீா்த்தனா மூன்றாமிடமும் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு விருதுநகா் மாவட்ட கேரம் கழகத் தலைவா் ஏ.பி.செல்வராஜன் பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக மாவட்ட கேரம் கழக பொருளாளா் சங்கா் வரவேற்றாா். மாவட்ட கேரம் கழக செயலாளா் டி.எம்.ராஜ கோபால் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com