இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.
சேத்தூரில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
சேத்தூரில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

சேத்தூா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தா்னாவுக்கு நகரச் செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் கண்டன உரையாற்றினாா்.

தாமிரவருணி கூட்டுக் குடிநீா் அனைத்து நகரங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் முறையாக விநியோகம் செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஒன்றியச் செயலாளா் கணேசமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் பகத்சிங், அய்யனன், ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com