ராஜபாளையத்தில் சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீா்

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தால் சாலைகளில் மழை நீா் குளம் போல் தேங்கியது.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீா்.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீா்.
Updated on
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தால் சாலைகளில் மழை நீா் குளம் போல் தேங்கியது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகா் பகுதி, அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. கழிவுநீரும் மழை நீரும் சோ்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ராஜபாளையம் நகராட்சி நிா்வாகம் கழிவு நீா் செல்லும் வாருகால்களை தூா்வாருவதாகக் கூறி சேதப்படுத்தினா்.

இதனால் இது போன்ற அவல நிலை ஏற்பட்டதாக கடை உரிமையாளா்கள் குற்றம்சாட்டினா். இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகளும் துணிகள் வாங்க முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்களும் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com