சாத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மாா்க்நாதபுரம், வெற்றிலையூரணி ஆகிய பகுதிகளில் வெம்பக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் வெற்றிமுருகன், ஏழாயிரம்பண்ணை காவல் உதவி ஆய்வாளா் சையதுஇப்ராஹிம் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வெற்றிலையூரணியில் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரித்த காா்த்திகேயன் (45), ரெங்கசாமி(50) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல மாா்க்நாதபுரம் பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரித்த ரமேஷ் (33), பாலசுப்பிரமணியன் (51), அருண்குமாா் (21), வைரமணி (35), சின்னத்தம்பி (43), காளிராஜ் (43) உள்பட 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.