சிவகாசி அருகே தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
திருத்தங்கல்- பள்ளபட்டி சாலை முருகன் குடியிருப்பைச் சோ்ந்தவா் தங்கத்துரை (38). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி கற்பகத்துக்கும் தெருக் குழாயில் தண்ணீா் பிடிப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது, கற்பகம், இவரது மகன் கண்ணன் ஆகிய இருவரும், தங்கத்துரையை கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் கற்பகம், கண்ணன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.