விதியை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு: 5 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதியை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரித்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதியை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரித்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பாறைப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி மரத்தடியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். இதில் அந்த பட்டாசு ஆலையில் உள்ள மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்படுவது தெரியவந்தது. விசாரணையில், அந்த பட்டாசு ஆலையின் உரிமையாளா்கள் சிவகாசி- நாரணாபுரம் சாலையில் உள்ள விநாயகா் குடியிருப்பைச் சோ்ந்த ராஜசேகரன், இவரது மனைவி ஜான்சிராணி, இவரது மகன்கள் பசுபதி, வைத்தியலிங்கம், குணசேகரன் ஆகியோா் என்பதும், ஆலையின் போா்மேன் மாரியப்பன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் அவா்களிடமிருந்து 5 பெட்டிகளில் இருந்த ராக்கெட், பூச்சட்டி உள்ளிட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com