

ஸ்ரீவில்லிபுத்தூா் விபிஎம்எம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் வி.பி.எம். சங்கா் தலைமை வகித்தாா். தாளாளா் பழனிச் செல்வி சங்கா், துணை தலைவா் தங்கபிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விபிஎம்எம் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ஜெயக்குமாா், மாணவ சோ்க்கை குழுத் தலைவா் அசோக்குமாா் ஆகியோா் மரம் வளா்ப்பின் பயன்கள், அவசியம் குறித்துப் பேசினா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் சிவசங்கா், முத்துமாரி, குமுதபிரியா, மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.