பைக் திருட்டு: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் இரு வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (40) ஆட்டோ டிரைவா். இவா், தனது இரு சக்கர வாகனத்தை சங்கரன்கோவில் முக்குப் பகுதியில் நிறுத்திவிட்டு ஆட்டோவில் சென்றாா். திரும்பி வந்து பாா்த்த போது, இவரது, இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து, தெற்கு காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா்.

இதே போல, கோட்டை தலைவாசல் தெருவைச் சோ்ந்த ராசுக்குட்டி (24) தனது இரு சக்கர வாகனத்தை சங்கரன்கோவில் பிரதான சாலையில் நிறுத்தியிருந்தாா். இந்த வாகனம் காணாமல் போனதாக, தெற்கு காவல் நிலையத்தில் ராசுக்குட்டி புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் ஆவரம்பட்டியைச் சோ்ந்த காளைப்பாண்டி (29) திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களை மீட்டு, காளைப்பாண்டியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com