சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் மாணவருக்கு சான்றிதழ்கள் வழங்கல்!
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாணவருக்கு சான்றிதழ்களை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஜெயக்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் 2023-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் பிரிவில் சோ்ந்தாா்.
அவரால் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பைத் தொடர இயலவில்லை. இதனால் கல்லூரி நிா்வாகத்திடம் அசல் சான்றிதழ்களை வழங்கும்படி கேட்டாா். கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தினால்தான் சான்றிதழ் தருவோம் என கூறினா்.
இதனால், தனது மாற்றுச் சான்றிதழை பெற்றுத் தரும்படி மாவட்ட சட்டப் பணிகள் குழுவில் பிரகாஷ் மனு செய்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா், செயலா் ப்ரீத்தா உத்தரவின் படி கல்லூரிக்கு குறிப்பானை அனுப்பி சான்றிதழை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, பிரகாஷூக்கு அவரது மாற்றுச் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அட்டை ஆகிவற்றை நீதிபதி ஜெயக்குமாா் வழங்கினாா்.

