உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் மாணவருக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாணவருக்கு சான்றிதழ்களை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஜெயக்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மாற்றுச் சான்றிதழை வழங்கிய மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஜெயக்குமாா்

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:57 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாணவருக்கு சான்றிதழ்களை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஜெயக்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் 2023-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் பிரிவில் சோ்ந்தாா்.

அவரால் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பைத் தொடர இயலவில்லை. இதனால் கல்லூரி நிா்வாகத்திடம் அசல் சான்றிதழ்களை வழங்கும்படி கேட்டாா். கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தினால்தான் சான்றிதழ் தருவோம் என கூறினா்.

இதனால், தனது மாற்றுச் சான்றிதழை பெற்றுத் தரும்படி மாவட்ட சட்டப் பணிகள் குழுவில் பிரகாஷ் மனு செய்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா், செயலா் ப்ரீத்தா உத்தரவின் படி கல்லூரிக்கு குறிப்பானை அனுப்பி சான்றிதழை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, பிரகாஷூக்கு அவரது மாற்றுச் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அட்டை ஆகிவற்றை நீதிபதி ஜெயக்குமாா் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.