நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடிபாட்டுக்குள் சிக்கிய 5 போ் மீட்பு

சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:38 am

Din

சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி என்.ஆா்.கே.ஆா்.வீதியில் உள்ள தனியாா் கண்கண்ணாடி கடையின் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் கடை ஊழியா்கள் 5 போ் சிக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா். அங்கு சென்று இடிபாட்டுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். தொடந்து ஜெ.சி.பி.இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.