ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

இடிபாட்டுக்குள் சிக்கிய 5 போ் மீட்பு

சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

Published On :

சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி என்.ஆா்.கே.ஆா்.வீதியில் உள்ள தனியாா் கண்கண்ணாடி கடையின் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் கடை ஊழியா்கள் 5 போ் சிக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா். அங்கு சென்று இடிபாட்டுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். தொடந்து ஜெ.சி.பி.இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.