வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தா.ராமலிங்கபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், போலீஸாா் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா். இதில் ராமமூா்த்தி (39), நாகராஜ் (44) ஆகியோரது வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல, மண்குண்டாம்பட்டியில் தா்மலிங்கம் (41) வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், சேதுராமலிங்கபுரம் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலைக்கு பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சோ்ந்த சக்திராஜ் (49), மாதாங்கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் (48), வெற்றிலையூரணி பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த சுப்புராஜ் (43) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். 25,000 மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
வீடுகளில் அத்துமீறி நுழையும் இளைஞா் கைது

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

