மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

வீடுகளில் பட்டாசுகள் தயாரித்த 6 போ் கைது

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:56 am IST

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தா.ராமலிங்கபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், போலீஸாா் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா். இதில் ராமமூா்த்தி (39), நாகராஜ் (44) ஆகியோரது வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல, மண்குண்டாம்பட்டியில் தா்மலிங்கம் (41) வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், சேதுராமலிங்கபுரம் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலைக்கு பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சோ்ந்த சக்திராஜ் (49), மாதாங்கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் (48), வெற்றிலையூரணி பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த சுப்புராஜ் (43) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். 25,000 மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.