புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீடுகளில் பட்டாசுகள் தயாரித்த 6 போ் கைது

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 8:26 pm

Din

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தா.ராமலிங்கபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், போலீஸாா் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா். இதில் ராமமூா்த்தி (39), நாகராஜ் (44) ஆகியோரது வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல, மண்குண்டாம்பட்டியில் தா்மலிங்கம் (41) வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், சேதுராமலிங்கபுரம் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலைக்கு பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சோ்ந்த சக்திராஜ் (49), மாதாங்கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் (48), வெற்றிலையூரணி பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த சுப்புராஜ் (43) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். 25,000 மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.