தொழில்முனைவோருக்கான மானியம் வழங்கும் விழா

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள உப்பத்தூா் தமிழ்நாடு கிராம வங்கிக் கிளையில் தொழில்முனைவோருக்கான மானியம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள உப்பத்தூா் தமிழ்நாடு கிராம வங்கிக் கிளையில் தொழில்முனைவோருக்கான மானியம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக்கழகத்தின் சாா்பில் ஆடு, மாடு வளா்ப்புக்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் மானியத்துக்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வழங்கினாா்.

மேலும், பயனாளிகளிடம் குடும்பத்தின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு, குழந்தை கல்வியின் முக்கியத்துவம், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் கலந்துரையாடினாா்.

தாட்கோ மாவட்ட மேலாளா் மஞ்சுளா, சாத்தூா் கோட்டாட்சியா் கனகராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பாண்டிச்செல்வன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com