சாத்தூா்-சிவகாசி சாலையில் விட்டு செல்லபட்ட மினிவேன் மற்றும் அரிசி மூட்டைகள்.
சாத்தூா்-சிவகாசி சாலையில் விட்டு செல்லபட்ட மினிவேன் மற்றும் அரிசி மூட்டைகள்.

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

சாத்தூா் அருகே சரக்கு வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை சாலையில் வீசிச் சென்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

சாத்தூா் அருகே சரக்கு வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை சாலையில் வீசிச் சென்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சின்னகாமன்பட்டி சாலையில் சரக்கு வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்திலிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளும் சாலையில் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த சாத்தூா் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

சாத்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சரக்கு வாகனத்தை, காரில் வந்த மா்ம நபா்கள் தாக்கி முன்பக்க கண்டியை உடைத்து, வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை சாலையில் இழுத்து வீசிவிட்டு சரக்கு வாகன ஓட்டுநரை கடத்திச் சென்ாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் போலி பதிவெண் கொண்ட அந்த சரக்கு வாகனத்தைக் கைப்பற்றினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

சிவகாசி பகுதியில் இரு குழுக்களாக ரேஷன் அரிசி கடத்தி வந்துள்ளனா். அவா்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com