புத்தாண்டு: ஆண்டாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாா், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாள்.










