சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான நீள் வட்டம், கூம்பு, அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

News image

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் நீள் வட்டம், கூம்பு வடிவம், அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள், கைரேகை பதிந்த ஆட்டக்காய்.

Updated On :2 ஜனவரி 2025, 12:37 am

Din

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான நீள் வட்டம், கூம்பு, அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த 3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, சுடுமண்ணாலான நீள் வட்டம், கூம்பு, அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் கண்டறியப்பட்டன.

அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில், அதைத் தயாரித்தவரின் கைரேகை பதிவாகியிருப்பதாக தொல்லியல் துறை இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.