நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் இன்று மின்தடை

Published on

விருதுகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் புதன்கிழமை (நவ.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராஜபாளையம் மின் பகிா்மான கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால்,

நல்லமநாயக்கன்பட்டிக்கு உள்பட்ட சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சிப்கோ குடியிருப்பு, சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், முத்தாநதி, பானங்குளம், என். புதூா், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான் பகுதிகளிலும், தொட்டியபட்டிக்கு உள்பட்ட புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூா், ராஜீவ்காந்தி நகா், வேட்டைப்பெருமாள் கோயில், விஷ்ணு நகா் பகுதிகளிலும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com