விருதுநகர்
மயங்கிக் கிடந்த தொழிலாளி உயிரிழப்பு
சாத்தூரில் மயங்கிக் கிடந்த வா்ணம் பூசும் தொழிலாளி உயிரிழந்தாா்.
சாத்தூரில் மயங்கிக் கிடந்த வா்ணம் பூசும் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் தீனதயாளன் (28). இவா் வா்ணம் பூசும் வேலை செய்து வந்தாா். மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாா்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு தீனதயாளன் அவரது வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாா். அருகில் இருந்தவா்கள் இவரை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே தீனதயாளன் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
