சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:34 am

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரைவத் தொகுதிகளிலும் கடந்த 30-ஆம் தேதி முதல் வருகிற 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆணையருமான(கலால்) டி.வி. ரமேஷ், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.