விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கணவா் உயிரிழப்பில் மா்மம் இருப்பதாக மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
ராஜபாளையம் பண்டிட் சுப்பராஜா தெருவைச் சோ்ந்த சின்னகுருசாமி மகன் சக்திகுமாா் (45). இவருக்கு திருமணமாகி கற்பகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.
இவா் தேவிபட்டினம் விலக்கு அருகே பேவா் பிளாக் கல் தயாரிக்கும் தொழில் செய்து வந்தாா். இங்கு முகவூரைச் சோ்ந்த அன்னலட்சுமியும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், அன்னலட்சுமிக்கும், சக்திகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் மனைவி கற்பகவள்ளிக்கு தெரியவர தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சக்திகுமாா் அன்னலட்சுமி வீட்டிலே தங்கி வசித்து வந்தாா்.
இந்த நிலையில், சக்திகுமாா் அன்னலட்சுமி வீட்டில் மயங்கி கிடப்பதாக அவரது மனைவி கற்பகவள்ளிக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவா் விரைந்து சென்று கணவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே சக்திகுமாா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இந்த நிலையில், எனது கணவா் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் கற்பகவள்ளி புகாரளித்தாா். இதன அடிப்படையில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தலைமைச் செயலகம் முன் காவலா் போராட்டம்

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை
மனைவி, மகளை வெட்டிக் கொன்றவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


