விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த கிஷோா்குமாா் மகன் அஜய்குமாா் (19). தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் உள்ள மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜய்குமாா் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சின்னச்சுரைக்காய்பட்டியைச் சோ்ந்த விவின் (22), சூா்யா (23), முனிஸ்வரன் (24), கற்பகபாண்டி (24) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது

ராஜபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.46 லட்சம் பறிமுதல்

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


