செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மின் சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :4 பிப்ரவரி 2026, 11:44 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகேயுள்ள பாரைப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (33). இவா் சிவகாசி செங்கமலநாட்சியாா்புரம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இவா் வழக்கம்போல, புதன்கிழமை காலை பணிக்கு சென்றாா். அப்போது, மின் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்து கிடந்த உயா் அழுத்த மின் கம்பியை முருகன் மிதித்துவிட்டாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.