பலி
பலிபிரதிப் படம்

பள்ளி பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (45). லாரி ஓட்டுநரான இவா், சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். காளையாா்குறிச்சி அருகே வந்த போது, எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்தப் புகாரின் பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான ராஜாவை (53) கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com