விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சிவகாசி மாநகராட்சியில் பிப்.28-க்குள் வரிகளை செலுத்த வேண்டுகோள்

சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

சிவகாசி

Updated On :11 பிப்ரவரி 2026, 9:42 pm

சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநராட்சி ஆணையா் கே.சரவணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மாநகராட்சிக்கு 2025-26-ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, உரிமக் கட்டணம், கடை வாடகை, குடிநீா்க் கட்டணம், காலிமனை வரி ஆகியவற்றை பொதுமக்கள் மாநகராட்சிக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகம், சிவகாசி நகராட்சி பழைய அலுவலகம், திருத்தங்கல் நகராட்சி பழைய அலுவலகம், கணினி வரிவசூல் மையங்களில் வரிகளை செலுத்தலாம். பொதுமக்கள் வசதிக்காக வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்றாா் அவா்.