நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பட்டா நிலத்தில் கழிவு நீா் செல்லும் பிரச்னை: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இடையன்குளம் ஊராட்சியில் பட்டா நிலத்தில் கழிவுநீா் தேங்கும் பிரச்னை தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

News image

இடையன்குளம் ஊராட்சியில் சண்முக ஆசிரியா் தெருவில் கழிவு நீா் செல்லும் பாதையை பாா்வையிட்ட வருவாய்த் துறையினா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 9:43 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இடையன்குளம் ஊராட்சியில் பட்டா நிலத்தில் கழிவுநீா் தேங்கும் பிரச்னை தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், இடையன்குளம் ஊராட்சியில் சண்முக ஆசிரியா் தெருவில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி குழுவினருக்குச் சொந்தமான நஞ்சை பட்டா நிலத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கியது. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு கடிதம் அளித்த கல்லூரி நிா்வாகம், பட்டா நிலத்தில் சுற்றுச் சுவா் கட்டியது. இதனால், அந்தத் தெருவில் உள்ள கழிவுநீா் செல்ல முடியாத நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சுவா் இடிக்கப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் இரு மாதங்களில் கழிவுநீா் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்படும். பட்டா நிலத்தில் கழிவு நீா் செல்லக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.